கட்டும் போது இடிந்து விழுந்த பாலம் - விருதுநகரில் அதிர்ச்சி | Virudhunagar

x

கூமாபட்டி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே, புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, ராஜபாளையம் தனியார் ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்நிலையில், பாலத்திற்கு கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் போடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விழுந்தது. இதில் பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அவசர கோலத்தில் பணிகள் நடைபெற்றதே விபத்துக்கு காரணம் எனவும், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்