#BREAKING || உதவி ஜெயிலர் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம்... மேலும் இரண்டு பேர் கைது

x

உதவி ஜெயிலர் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்: மேலும் இரண்டு பேர் கைது.

கடலூர்: மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டிற்கு தீ வைப்பு.

கடந்த 28ஆம் தேதி தீ வைத்து மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் கொல்ல முயற்சி நடைபெற்றது.

இதில் தொடர்புடைய கடலூர் மத்திய சிறை வார்டன் செந்தில்குமார் மற்றும் வழக்கறிஞர் தினேஷ் கைது செய்யப்பட்டனர்.

தற்பொழுது சிறையில் உள்ள ரவுடி தனசேகரனின் தம்பி மதிவாணன்(26) மற்றும் திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த மௌலிதரன்(23) ஆகிய இரண்டு பேர் கைது.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சிறையில் உள்ள ரவுடி தனசேகரன் செல்போன் பயன்படுத்தியதை கண்டுபிடித்ததால் உதவி ஜெயிலர் மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்