வீடுகளில் புகுந்து தொடர் கொள்ளை - சிக்கியர்வர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

x

வீடுகளில் புகுந்து தொடர் கொள்ளை

சிக்கியர்வர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

ராணிப்பேட்டையில் வீடு புகுந்து கைவரிசை காட்டி வந்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் காடிஸ் மற்றும் அவரது கூட்டாளிகளான திவாகர் , அர்ஷாத் , சதீஷ் ஆகியோர் சேர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு காடீஷ், ரேஸ் மாடுகளை வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காடீஷ், மற்றும் அவனது கூட்டாளிகளை வாலாஜாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 100 சவரன் தங்க நகைகளை உருக்கி விற்பனை செய்து விட்டதால் அதனை மீட்க முடியாமல் போலீசால் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது 6 சவரன் தங்க நகைகள் 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த வாலாஜாப்பேட்டை போலீசார் , 4 பேரையும் கைது செய்து வாலாஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையிலடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்