பல லட்சம் மதிப்பிலான விசைப்படகு... - தூள் தூளாக உடைத்த காட்சி

x

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில், சேதமடைந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகு, மூன்று மணி நேரத்தில் தூள், தூளாக உடைக்கப்பட்டது. சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர், தனது விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக படகில் ஓட்டை ஏற்பட்டு, சதுரங்கப்பட்டினம் கடற்கரை மணலில் புதைந்து விட்டது. மேலும், பக்க வாட்டு பகுதி சேதமடைந்து, என்ஜின் பழுதடைந்ததால், விசைப்படகை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே, கடலில் ஆறு அடி ஆழத்தில் புதைத்த விசைப்படகை, இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலம் தூள், தூளாக உடைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்