ஊர் முழுவதும் கருப்புக்கொடி... சுதந்திர தின விழாவை புறக்கணித்த மக்கள் - காரணம் என்ன..?

x

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 385-வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு தங்கள் குழந்தைகளை அனுப்பாமல் ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கிராமம் முழுவதும் கருப்புக்கொடிகளை ஏற்றிவைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுவரை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு பலனில்லாத நிலையில், கிராம மக்கள் அனைவரும், கிராம சபைக் கூட்டத்தையும் புறக்கணித்துள்ளனர்.

இதன் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்