தடையை மீறி ஆர்ப்பாட்டம் - தஞ்சையில் பாஜகவினர் கைது

x

தஞ்சாவூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற தஞ்சாவூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி தொடக்க விழாவில், பாஜகவினரை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஒருமையில் பேசியதாக கூறி, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி தராத நிலையில், தடையை மீறி போராடுவதற்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்த பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்