ஒரே நேரத்தில் ஆறுதல் சொன்ன பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்

x

ஒரே நேரத்தில் ஆறுதல் சொன்ன பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்

சென்னையில் சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து தீக்குளித்து உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் ஒரே நேரத்தில் ஆறுதல் தெரிவித்தனர்.

தன் மகனுக்கு சாதிச்சான்றிதழ் மறுக்கப்பட்டதால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சட்ட உதவி மையம் அருகே தீக்குளித்த மலைகுறவர் சமூகத்தை சேர்ந்த வேல்முருகன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில் வேல்முருகனின் உடல் வைக்கப்பட்டு உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும், தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜனும் வேல்முருகனின் உறவினர்களுக்கு ஒரேநேரத்தில் ஆறுதல் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்