ரயில் நிலையத்தில் பைக் திருட்டு - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

காட்பாடி ரயில் நிலையம் அருகே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ராணிப்பேட்டையை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தனது நண்பரை ரயில் நிலையத்தில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணாமல்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்