"ராங் ரூட்டில்" வந்த பைக்... தொழிலாளியை அடித்து தூக்கிய கார்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் அவசரகதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கரவாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். காளிவேலம்பட்டியில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர், திருச்சி - கோவை நெடுஞ்சாலையில் ஒருவழிப்பாதையில் சென்றுள்ளார். அவசர கதியில் அவர் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார், இருசக்கரவாகனத்தின் மீது மோதியதில் தொழிலாளி தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்