மதுரையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு பூமி பூஜை - அமைச்சர் மூர்த்தி

x

மதுரை அலங்காநல்லூரில் 1 கோடியே 44 லட்ச ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அமைச்சர் மூர்த்தி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மூர்த்தி, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும், கட்டிட பணிகளை அதிகாரிகள் தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கட்டுமான பணிகளை தாம் அடிக்கடி வந்து ஆய்வு செய்யப்போவதாகவும், பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்