வைகை ஆறு பக்கம் போனால் ஜாக்கிரதை!.. வெட்டு காயம், ரத்தம் வழிய வரும் நபர்கள்

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள வைகை ஆற்றுக்குள், நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் மது அருந்தியுள்ளனர். அப்போது, அவ்வழியே சென்ற பொதுமக்கள் சிலரிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த கும்பல், அவர்களை அரிவாளால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், காயமடைந்த 3 பேர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. உடனே, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்த 4 சிறுவர்கள் உட்பட 5 பேரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்ற நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்