கடன் பிரச்சினையால் விபரீத முடிவு...கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி...

x

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பிரின்ஸ் கார்டனை சேர்ந்தவர் முகைதீன். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி வந்துள்ளார். கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த முகைதீன், பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த பின், வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான பொது கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு, தனது ரத்தத்தால் வீட்டின் செல்போன் எண்ணை எழுதி வைத்துள்ளார். அப்போது கழிவறையை சுத்தம் செய்ய சென்ற பேராலய ஊழியர் கோவிந்தராஜ் என்பவர், ரத்த வெள்ளத்தில் கிடந்த முகைதீனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், முகைதீனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்