"இனி தாயில்லா குழந்தைக்கும் தாய்ப்பால்" 24 மணி நேரமும் இலவசம் - கோவையில் புதிய முயற்சி '

x

பிறக்கும் குழந்தைகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காத நிலையில், மருத்துவமனைகளில் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இந்நிலையில், எல்லா நேரத்திலும் தாய்ப்பால் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்காக, கோவை பச்சாபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில், தாய்ப்பால் ஏடிஎம் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் இருந்து 24 மணி நேரமும் இலவசமாக தாய்ப்பால் பெற்றுக்கொள்ளலாம்.

இங்கு தானமாக பெறப்படும் தாய்ப்பாலை முறையாக பரிசோதித்து, மற்ற குழந்தைகளுக்கு உகந்ததென கண்டறிந்த பிறகே ஏடிஎம் மையத்தில் சேகரித்து வைப்பதாக, மையத்தின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்