சிகிச்சையில் இறந்து பிறந்த குழந்தை... ஸ்கேனில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

x

கோட்டமேடு பகுதியை சேர்ந்த அபிநயாவுக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், இரவு 9 மணி அளவில் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவம் ஆக வாய்ப்பு குறைவு என கூறி இன்று அதிகாலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது... தொப்புள் கொடி சுற்றியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு வயிற்றிலே குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கும் போது செய்த ஸ்கேனில் குழந்தை நல்ல நிலையில் இருந்ததாகவும், அறுவை சிகிச்சை செய்த பின்னர் குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறுவது மருத்துவர்களின் அலட்சியம் எனக்கூறி உறவினர்கள் வாக்குவாதம் செய்ததுடன், மருத்துவமனை கதவின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளித்தால் விசாரணை மேற்கொள்வதாக கூறியதை அடுத்து உறவினர்கள் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்