பயணியின் விரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுநர் - சென்னை திருவான்மியூரில் பரபரப்பு

x

சென்னையில் சவாரி வந்த இடத்தில் ஏற்பட்ட தகறாரில், பயணியின் விரலை ஆட்டோ ஓட்டுநர் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த ராமு என்பவர், பணி முடிந்து திருவான்மியூர் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றார். அப்போது, ஓட்டுநர் இருக்கையின் பின்புறம் உள்ள கம்பியில் அவர் காலை வைத்ததால், அதற்கு ஆட்டோ ஓட்டுநர் சந்தானம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் பொறுமையிழந்த ஆட்டோ ஓட்டுநர் சந்தானம், ஆட்டோவில் இருந்த கம்பியை எடுத்து ராமுவை தாக்கி உள்ளார். மேலும் ஆத்திரம் தீராத அவர், ராமுவின் கை சுண்டு விரலை கடித்து துப்பி உள்ளார். ரத்தம் வடிய நின்று கொண்டிருந்த ராமுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவருடைய கை விரலை ஒட்டவைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனர் சந்தானத்தை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்