மாணவர்கள் கவனத்திற்கு...நாளையுடன் முடிவடையும் பொறியியல், கலை கல்லூரி விண்ணப்பம்

x

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும், பொறியியல் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு அறிவிக்கப்பட்டது. பொறியியல் படிப்பிற்கு ஜூன் 20-ஆம் தேதியில் இருந்தும், கலை அறிவியல் படிப்புகளுக்கு ஜூன் 22ஆம் தேதியில் இருந்தும் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து மேலும் 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிகிறது. கலை, அறிவியல் படிப்புகளில் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புகளிலும் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்