ATM, கோயில் உண்டியலில் கைவரிசை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி | Ambai | Theft

x

அம்பையில் கோவில் உண்டியலை உடைத்து தூக்கி சென்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா அலுவலகத்திற்கு எதிரேயுள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை கடந்த 22- ந் தேதி மர்ம நபர்கள் 2 பேர் உடைத்து பணத்தை திருட முயன்றனர். இதேபோல கிருஷ்ணன் கோவில் உண்டியலையும் உடைத்து கையில் தூக்கி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், சிவ பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், உண்டியலையும் பறிமுதல் செய்தனர். தற்போது உண்டியலை உடைத்து தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்