வியாசர்பாடி டூ அசோக் பில்லர்...சறுக்கி விழுந்த வாகன ஓட்டிகள் - லாரியில் இருந்து கசிந்த டீசல்

x

சென்னை வியாசர்பாடி அசோக் பில்லர் பகுதியிலிருந்து பேசின் பிரிட்ஜ் செல்வதற்கு வியாசர்பாடி மேம்பாலத்தை இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. வழக்கம் போல், இரு சக்கர வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் செல்வதற்கு மேம்பாலத்தின் மீது ஏறி சென்றது. அப்போது, திடீரென இரு சக்கர வாகனங்கள் அடுத்தடுத்து கீழே விழுந்தன. இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனிடையே, அவ்வழியாக சென்ற லாரியில் இருந்து டீசல் கசிந்து மேம்பாலத்தின் மீது சிந்தியுள்ளது. உடனடியாக பொதுமக்கள் மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், அங்கு வந்த ஊழியர்கள் மரத்தூள்களை பயன்படுத்தி டீசல் கசிந்த இடத்தை சுத்தம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்