ஆருத்ரா மோசடி வழக்கு - உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமார் ஜாமின் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், 25வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்ட சசிகுமார் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஏப்ரல் 29ம் தேதிக்கு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்