ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை-சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்துவது குறித்த கோரிக்கையை பரிசீலிக்க சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்