உணவகங்களில் ரசாயனம் கலக்கப்படுகிறதா.?களத்தில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்..

x

உணவகங்களில் ரசாயனம் கலக்கப்படுகிறதா.?களத்தில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்..


உணவுகளில் அதிகளவு ரசாயனம் கலக்கப்படுவதாக புகார்கள் குவிந்த நிலையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஓமலூர், காமலாபுரம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள

உணவகங்களில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கிருந்த பிரியாணி உள்ளிட்ட பொருட்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். அத்துடன் உணவகங்களில் பார்சலுக்காகப்

பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், எண்ணெய்களைத் தொடர்ந்து 2 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என

அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை ஆய்வகத்திற்கு அனுப்பி அதில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வுக்கு

உட்படுத்தப்படுத்தினர். ரசாயனம் கலந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டால் உணவகங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்