கரூரில் களம் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை - சிக்கலில் அரசு அதிகாரி

x

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சித் துறை துணைப் பொறியாளர் கார்த்திக் என்பவர், 2014 முதல் 2021 காலகட்டத்தில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கிடைத்த‌து. இதனடிப்படையில், கார்த்திக், அவரது மனைவி கவிதா மற்றும் தயார் காளியம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வருவாய்க்கு அதிகமாக 66 விழுக்காடு சொத்து சேர்த்த‌தும், ஒன்றரை கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதையும் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மூலமங்கலம் பகுதியில் உள்ள கார்த்திக்கின் மாமனார் ராமலிங்கம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்