தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் அறிவிப்பு

x

கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வரும் மோடி அரசே வெளியேறு என வலியுறுத்தி நாளை முதல் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 12, 13, 14 -ம் தேதிகளில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மையங்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பங்கேற்பதாகவும்,இதேபோல் பல்வேறு பகுதிகிளில் நடைபெறும் போராட்டத்தில் அந்த பகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்