மசூதிக்கு அருகில் கிடைத்த இரும்புப் பெட்டி..! மின் இணைப்பு துண்டிப்பு... அதிகாரிகள் திணறல்

x

மசூதிக்கு அருகில் பழங்கால இரும்புப் பெட்டியில் புதையல் இருப்பதாகப் பரவிய தகவலால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.


வேலூர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது இம்தியாஸ், கவுண்டன்யா ஆற்றங்கரை அருகே ஜோதிமடம் பகுதியில் தேங்காய் நார் கம்பெனி நடத்தி வருகிறார்...இவர் தனக்கு சொந்தமான ஆயிரம் கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கர் பெட்டியை மசூதிக்கு அருகில் டிராக்டரில் இறக்கியுள்ளார் ... மர்மமான முறையில் இரும்பு பெட்டி இருப்பதாகவும், அதில் புதையல் இருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் சுமார் அரை மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இதை விலைக்கு வாங்கியதாகவும் தற்போது அதனை வைத்து பராமரிக்க முடியாது என்பதால் மசூதிக்கு வழங்க இங்கே எடுத்து வந்து வைத்து விட்டு சென்றதாகவும் முகமது இம்தியாஸ் தெரிவித்தார். மேலும் அருகே உள்ள ஆற்றில் தற்போது பணிகள் நடைபெற்று வருவதால் சிலர் அதை தவறாக புரிந்து கொண்டு ஆற்றில் இருந்து எடுத்து வந்ததாக தகவல் பரவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும் தற்போது பெட்டி உடைக்கும் பணியில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அரை மணி நேரம் போராடி பெட்டியை உடைக்க முடியாத நிலையில் பின்னர் இயந்திரம் மூலம் உடைக்க முடிவு செய்து இயந்திரம் வரவழைக்கப்பட்டும் பெட்டியை அறுக்க முடியவில்லை. பல மணி நேரமாக பெட்டியை உடைக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்