அம்பானி வீட்டிற்கு விபூதி அடிக்க ஸ்கெட்ச்...படையைப் பார்த்ததும் சிதறிய ஜீரோக்கள்

x

செல்வந்தர் முகேஷ் அம்பானியின் இல்ல திருமண விழா குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. உலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்துக்கொண்டனர். இந்த சூழலில், ராஜ்கோட்டில் உயர்ரக சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து 10 லட்சம் ரூபாய் ரொக்கம், லேப்டாப்பை கொள்ளையடித்ததாக திருச்சியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை ராஜ்கோட் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை விசாரித்ததில், அம்பானி இல்ல திருமண விழாவில் கொள்ளையடிக்க ஜாம்நகர் சென்றதாகவும், பாதுகாப்பு கெடுபிடி அதிகமாக இருந்ததால், ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் கூறியுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள கொள்ளை கும்பல் தலைவன் மதுசூதனை ராஜ்கோட் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்