"அட நம்ம சிவசங்கரா இது".. பேரை சொல்லி ஒளிந்துகொண்ட மாணவி.. ஒரு நொடி ஸ்டன் ஆன அமைச்சர்

x

பெரம்பலூர் மாவட்டம் குரும்பாபாளையம் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்ட மதிய உணவை சாப்பிட்டு பார்த்து, உணவின் தரம் நன்றாக இருப்பதாக பாராட்டினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் உரையாடிய சிவசங்கர், தமிழ்நாட்டின் முதல்வர் யார் என கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு மாணவன் பெருந்தலைவர் மு.க.ஸ்டாலின் என கூற, சிவசங்கர் அந்த மாணவனோடு கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார். அப்போது ஒரு மாணவி, ஐ.. சிவசங்கரா என குரல் எழுப்பினார். இதனையடுத்து அந்த மாணவியிடம் தன்னை தெரியுமா என விசாரித்த அவர், நன்றாக படி என மாணவியை பாராட்டினார்


Next Story

மேலும் செய்திகள்