ஒரு நாள் விடுமுறை முடித்து ஆபிஸை திறந்த உரிமையாளர் அதிர்ச்சி - ரூ.41 லட்சம் அபேஸ்..

x

சென்னை கீழ்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவன அலுவலகத்தில், ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இன்று அலுவலகத்தை திறந்த நிலையில், உரிமையாளரின் அறையில் வைக்கப்பட்டிருந்த 41 லட்ச ரூபாய் பணம் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில், ஊழியர்கள் யாரேனும் பணத்தை திருடிச்சென்றனரா? அல்லது வெளி ஆட்கள் கைவரிசையா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்