அ.தி.மு.க.,தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை - வெளிவந்த முக்கிய தகவல்

x

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் என 4 தொகுதியையும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்க தே.மு.தி.க. தலைமை வலியுறுத்தியதாக தெரிகிறது. அப்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முடியாது என, அ.தி.மு.க. திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில், மதுரை தொகுதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்து, 5 தொகுதி வரை ஒதுக்கும்படி தே.மு.தி.க. தலைமை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தே.மு.தி.க. பட்டியலிட்ட தொகுதிகளில் விழுப்புரம், கடலூர் என சில தொகுதிகளில் போட்டியிட, பா.ம.க.வும் விரும்புவதால், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க. இடையே தொகுதிகளை முடிவு செய்வதில் குழப்பம் நீடிப்பதால், கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலை தொடர்வதாக, தகவல் வெளியாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்