டீ கடை கட்ட விடாமல் மாமூல் கேட்டு மிரட்டும் அதிமுக கவுன்சிலர்.. தீயாய் பரவும் வீடியோ

x

காஞ்சிபுரம் மாவட்டம் பதுவஞ்சேரியை சேர்ந்த சாத்தையா என்பவர், தாம்பரம் மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர் வாட்டர் ராஜ் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் தேயிலை வளர்ச்சி வாரியத்திடம் அனுமதி பெற்று, தேயிலை மற்றும் தேனீர் கடை கட்டி வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் வாட்டர் ராஜ் மாமூல் கேட்பதாகவும், கொலை மிரட்டல் விடுத்து கடையை கட்டவிடாமல் தடுப்பதாகவும் புகாரளித்துள்ளார். அதேபோல அதிமுக கவுன்சிலர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேநீர் கடை கட்டும் தொழிலாளர்களை, அ.தி.மு.க. கவுன்சிலர் வாட்டர் ராஜ் மிரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்