அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - வெளியான தகவல்

x

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டை விட அதிகளவில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 300 மாணவர்கள் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 224 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 49 ஆயிரத்து 965 மாணவர்களும், 56 ஆயிரத்து 259 மாணவிகளும் அடங்குவர். 9 ஆயிரத்து 76 இடங்கள் காலியாக உள்ளன. எனினும், ஒட்டுமொத்த அளவில், கடந்த ஆண்டுகளை விட தற்போது அதிகளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்