அடையாறு பாலத்தில் மோதி நின்ற சொகுசு கார் - அதிர்ச்சி காட்சிகள்

x

சென்னை அடையாறு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை 8.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. வேகமாக வந்த கார், அடையாறு கோவிந்தசாமி பாலம் அருகே திரும்பியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியது. எனினும், இந்த சம்பவத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. காரை ஒட்டி வந்த ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த விபுஸ் என்பரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்தததால் விபத்து நேர்ந்த தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்