"நடவடிக்கை எடுக்கப்படும்.." - அமைச்சர்கள் கடும் எச்சரிக்கை

x

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை வெளியேற்றுவதால் நீர்நிலைகள் மாசடைந்து வருவதாக கிராம மக்கள் புகார் அளித்தனர்... அதன் பேரில் அமைச்சர்கள் மெய்யநாதன், முத்துச்சாமி ஆகியோர் அதிகாரிகளுடன் தொழிற்சாலைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்... கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்...


Next Story

மேலும் செய்திகள்