"நடவடிக்கை எடுக்க வேண்டும்..." - சென்னை ஐகோர்ட் அதிரடி | Chennai High Court

x

உரிய காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத சூளகிரி காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உரிய காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என சூளகிரி காவல் நிலைய ஆய்வாளர் ரஜினி என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்