டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 4 பேர் மீது நடவடிக்கை

x

அரசு பணிக்கு தேர்வு நடத்தியது தொடர்பாக நீதிமன்றத்திற்கு தவறான தகவல் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

TNPSC நடத்திய தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து சாய்புல்லா என்பவர் தொடர்ந்த வழக்கில், தவறான தகவல்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தவறான தகவல்களை அளித்ததாக அரசுப் பணியாளர் தேர்வாணைய இணைச் செயலாளர் உட்பட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மனுதாரரை தேர்வு செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும், தவறு நடந்தது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்