"ஆதி குணசேகரன் தாத்தா.." - மாரிமுத்து முகத்தை கடைசியாக பார்க்க.. - வீல்சேரில் வந்த ட்வின்ஸ் ரசிகைகள்

x

மறைந்த இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த இரட்டை மாற்றுத்திறனாளி சகோதரிகள் அனைவரையும் நெகிழ வைத்து விட்டனர்... மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரிக்குக் கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் அஞ்சலி செலுத்த அலைமோதியது... இந்நிலையில், மாரிமுத்துவின் மரணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நெல்லை வள்ளியூரைச் சேர்ந்த கிங்ஸ்லி என்பவரின் 2 மகள்களான மெர்சி மற்றும் ஆன்ஸி ஆகியோர் சக்கர நாற்காலியில் வந்து மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்... "ஆதி குணசேகரன் தாத்தாவ ரொம்பப் பிடிக்கும்" என அவர்கள் மழலை மொழியில் கூறியது, மாரிமுத்துவின் மீதான அவர்களின் அன்பை வெளிப்படுத்தியதோடு, அனைவரையும் நெகிழ வைத்து விட்டது...


Next Story

மேலும் செய்திகள்