ஆடி அமாவாசை - சதுரகிரி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள்

x

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் மலையேறி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில். 18 சித்தர்கள் வந்து தரிசனம் செய்த இம்மலையில் தற்போது வரையில் இங்கே சித்தர்கள் உலாவி வருகின்றனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் ஆடி அமாவாசை தினமான இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தாணிப்பறை அடிவாரம் வழியாக மிகுந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மலையர அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக ஆடி அமாவாசை தினத்தன்று அதிகம் கூட்டம் இருக்கும் என்பதால் 2000 காவல் துறையினர் 50-க்கும் மேற்பட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

60 சிசிடிவி கேமராக்கள் அமைத்து அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இருமுறை மலையில் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே மலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறனர். குறிப்பாக எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை மேலே கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது .மேலும் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீர் அவர்களின் குறிக்கவும் அனுமதி கிடையாது. முன்னதாக நேற்று பிற்பகலை அமாவாசை காலம் தொடங்கிய காரணத்தினாலும் நேற்று விடுமுறை என்ற காரணத்தினாலும் பக்தர்கள் நேற்று முதலே மலையேறி சுந்தரமாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இந்த ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினம் வந்ததாலும் கூட்டம் பெருவாரியாக பிரிந்ததற்கு காரணமாக உள்ளது. பிற்பகல் 12 வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி நாட்களில் நாளை கடைசி தினம் என்பதால் நாளையும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்