பெண் வருவாய் ஆய்வாளரை மிரட்டிய இளைஞர்.. வெளியான பரபரப்பு வீடியோ

x

ஓமலூர் அருகே உள்ள திண்டமங்கலம் கிராமத்தில் தனியார் நிலத்தில், மணல் கடத்துவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் பேரில், வருவாய் ஆய்வாளர் பாப்பாத்தி, கிராம நிர்வாக அலுவலர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்ற இளைஞர், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே அதிகாரிகளை மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது


Next Story

மேலும் செய்திகள்