"ஒரு பெண்ணும், ஆணும் தங்கியிருந்தாங்க"... ரவுடிகள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு

x

நெல்லை மாவட்ட கொலை குற்றவாளியான

சிவ சுப்பிரமணியம் என்பவரை, ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் வைத்து போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, சிவாவும் அவரது கூட்டாளிகளும் போலீசாரை தாக்கியதும், போலீசார் ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், சிவசுப்ரமணியம் உட்பட இருவரை போலீசார் நெல்லை அருகே துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது பரபரப்பை மேலும் கூட்டியது. தொடர்ந்து இரு ரவுடிகளையும் மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் மற்ற ரவுடிகளை வலை வீசி தேடி வந்தனர். இதனிடையே, ரவுடிகள் நால்வரும் தங்கியிருந்த குள்ளம்பாளையம் விவசாயத் தோட்ட இல்லத்தில் தடயவியல் நிபுணர்களுடன் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்திய போது, பெண் ஒருவர் மூலம் ரவுடிகள் வீடு வாடகைக்கு கேட்டதாகவும், தன் வீட்டு பெண்கள் விசாரிக்காமல் தங்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்