தண்ணீர் தொட்டியை திறந்ததும் திடீரென ஷாக் கொடுத்த வெள்ளை பாம்பு

x

கோவையில் அரிய வகை வெள்ளை நிற பாம்பு பிடிபட்டது. சுந்தராபுரம் பகுதியில் உள்ள வீட்டின் தண்ணீர் தொட்டியில் வெள்ளை நிறத்தில் பாம்பு பதுங்கி இருப்பதாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நபர் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனிடையே, பிடிபட்ட பாம்பு அரிய வகை இனமான பார்சியல் ஆல்பினோ கோப்ரா வகையைச் சேர்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்