வீட்டிற்குள் கேட்ட பயங்கர சத்தம்... ரத்த வெள்ளத்தில் தண்ணீர் தொட்டியில் கிடந்த பெண்

x

சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசனும் அவரது மனைவி சுகுணாவள்ளியும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஞாயிற்று கிழமையன்று, முருகேசன் வீட்டில் சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்ற சிறிது நேரத்திலிலேயே அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் வீட்டினுள் இருந்து சத்தம் வந்ததை அறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்து பார்த்தபோது தலையில் பலத்த காயத்துடன் சுகுணாவள்ளி ரத்த வெள்ளத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டிருந்தார். உடலை கைப்பற்றிய பள்ளப்பட்டி போலீசார், கொலையா? தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்