திடீரென வந்த போன் கால்... அலர்ட்டான தாம்பரம் போலீஸ்.. சகோதரர்களை சுத்து போட்ட காவலர்கள் | TN Police

x

சென்னை, தாம்பரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் கல்யான் பகுதியில், சகோதரர்களான இருவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், சம்பவ இடத்தில் சோதனை செய்த போலீசார், சகோதர்களான வெங்கடேஷ் மற்றும் மாதவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இருவரிடம் இருந்தும் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 10 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த நிலையில், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்