தோழியால் வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

x

மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பசுவந்தனை அருகேயுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, சம்பவத்தன்று பள்ளிக்கு வந்த போது திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், உடன் படிக்கும் தோழி தன்னுடன் பேசாததால் தலையில் தேய்ப்பதற்காக வைத்திருந்த சூப்பர் வாஸ் மாலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக மாணவி கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்