இல்லத்தரசிகளுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

x
  • மதுரை மாட்டுத்தாவணியில், திருக்கார்த்திகை தீபத்தையொட்டி பூக்களின் விலை கிடு, கிடு வென உயர்ந்துள்ளது.
  • திருக்கார்த்திகை தீப திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பூஜைக்கு தேவையான பூக்களின் விலை கிடு,கிடு வென உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் நேற்று 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ இன்று 2 ஆயிரத்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல
  • முல்லைப்பூ இன்று 800 ரூபாயாகவும், கனகாம்பரம் 1200 ரூபாயாகவும், பிச்சி 1000 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
  • இதேபோல சம்பங்கி 150 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 800 ரூபாய்க்கும், அரளி 400 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், செண்டுமல்லி 200 ரூபாய்க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்