அக்கா உடலோடு வந்த யுவனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

குட ியரசு தினத்தையொட்டி, மீனம்பாக்கம் விமான நிலைய முனையங்கள் முன் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் போர்டிகோ முன் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இலங்கையில் இருந்து சகோதரி பவதாரிணி உடலுடன் சென்னை வந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை அழைத்து செல்ல, அவரது கார் விமான நிலையத்தில் வருகை பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதை கண்ட கார் நிறுத்துமிட ஒப்பந்த ஊழியர்கள் யாருடையது என தெரியாமல் காரின் சக்கரத்தில் பூட்டு போட்டுவிட்டு சென்றனர். விமான நிலைய சோதனைகளை முடித்து கொண்டு உடலை பெற யுவன் சங்கர் ராஜா காரில் ஏறியுள்ளார். அப்போது காரில் பூட்டு போட்டு இருப்பதை கண்டதும் அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தனியார் நிறுவன ஊழியர்களை வரவழைத்து காரில் போடப்பட்ட பூட்டை திறந்தனர். பின்னர் கார் புறப்பட்டு சென்றது. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்