திடீரென எஸ்.பி அலுவலகத்தில் குவிந்த மக்கள் - ரியல் எஸ்டேட் அதிபர் செய்த அதிர்ச்சி சம்பவம்

x

திடீரென எஸ்.பி அலுவலகத்தில் குவிந்த மக்கள் - ரியல் எஸ்டேட் அதிபர் செய்த அதிர்ச்சி சம்பவம்

அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

#thanthitv | #tirupur

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே, ஒரே நிலத்தை பல பேருக்கு விற்பனை செய்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி100க்கும் மேற்பட்டோர் எஸ்.பி அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

பொங்குபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், வீட்டுமனைகள் விற்பனை செய்வதாக கூறி தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து வந்துள்ளார். இதில், ஒரே நிலத்தை பலருக்கு கிரயம் செய்து கொடுத்த ஆனந்தன், அவர்கள் அனைவரிடமும் முன்பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதில், நிலங்களை விற்று தரும்படி தன்னை தேடி வந்தவர்களின் நிலங்களையும்... ஆனந்தன் இதே பாணியில் விற்பனை செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகாரளித்தும் நடவடிக்கையில்லை என கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு குவிந்து புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்