தொடர் விடுமுறை... பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..

x

தூத்துக்குடியில் 15 நாட்களுக்கு பிறகு நாளை திறக்கவுள்ள பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கடந்த மாதம் தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த அதி கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. அந்த வகையில் பள்ளி வளாகத்தை மழைநீர் சூழ்ந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிலைமை சீராகி வருவதால் நாளை முதல் பள்ளிகள் இயங்கவுள்ளன. அதற்காக தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ஆசிரியர்களும் வகுப்பறைகளை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்