மயிலாடுதுறையில் போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

x

மயிலாடுதுறையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது...


மயிலாடுதுறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வடமாநில தொழிலாளர்கள் 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி பல ஆண்டுகளாக தூய்மை பணி செய்து வரும் 124 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், புதிதாக 17 வடமாநில தொழிலாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டதை அறிந்து, மற்ற தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்