கல்லூரி மாணவியை நடுரோட்டில் புரட்டி எடுத்த பள்ளி மாணவி... மாணவி எடுத்த விபரீத முடிவு..! பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

x

மன்னார்குடியில் பேருந்தில் இடம் பிடிப்பதில் கல்லூரி மாணவிகளுடன் ஏற்பட்ட மோதலால், பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த பவித்ரா ஸ்ரீ, மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்தநிலையில் மன்னார்குடி பேருந்து நிலையத்தில், பவித்ரா ஸ்ரீயும் சக மாணவிகளும் அரசு பேருந்து ஒன்றில் ஏறி இடம் பிடிக்க முயன்ற போது, கல்லூரி மாணவிகளுடம் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அப்போது 6 கல்லூரி மாணவிகள் இணைந்து பவித்ரா ஸ்ரீயை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமடைந்த பவித்ரா ஸ்ரீ, கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பேருந்தில் மாணவிகள் சண்டையின் காட்சிகள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்