50 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

x

50 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

மன்னார்குடி அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தனியார் பள்ளியின் பேருந்து ஒன்று தெம்பரை கிராமத்தில் சுமார் 50 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது.

அப்போது, முன்னால் சென்ற வாகனத்தை பேருந்து ஓட்டுநர் முந்திச் செல்ல முயன்ற போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

மேலும், விபத்து குறித்து பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டி பெற்றோர்கள் சாலை மறியல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்