பள்ளி வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - நூலிழையில் தப்பிய உயிர்

x

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தனியார் பள்ளி வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. குற்றாலத்தில் இருந்து பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற லாரியும், அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பள்ளி வாகன ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். வாகனத்தில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால், குற்றாலம் சாலையில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது...


Next Story

மேலும் செய்திகள்